தமிழ்நாடு செய்திகள்
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,804 கன அடியாக அதிகரிப்பு
- மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக, விநாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
- அணையின் நீர்மட்டம் நேற்று 103.70 அடியாக இருந்த நிலையில், இன்றும் அதே அளவில் நீடிக்கிறது.
மேட்டூர்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து, ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது.
ஒகேனக்கல் காவிரியில், நீர்வரத்து தொடர்ந்து 2 ஆயிரம் கன அடியாக நீடிக்கிறது. அதே சமயம், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து, நேற்று விநாடிக்கு 1,503 கன அடியாக இருந்த நிலையில், இன்று காலை விநாடிக்கு 1,804 கன அடியாக அதிகரித்துள்ளது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக, விநாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் நேற்று 103.70 அடியாக இருந்த நிலையில், இன்றும் அதே அளவில் நீடிக்கிறது.