மேட்டூர் அணை நீர்மட்டம் 4 நாட்களில் 2 அடி சரிவு
- கடந்த 22-ந்தேதி 106.61 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம், படிப்படியாக சரிந்து இன்று காலை 104.60 அடியாக உள்ளது.
- கடந்த 4 நாட்களில் மட்டும் நீர்மட்டம் 2 அடி சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேட்டூர்:
கர்நாடகா மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக சரிந்து வருகிறது.
நேற்று விநாடிக்கு 815 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை சற்று அதிகரித்து விநாடிக்கு 885 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து காவிரியில் 8 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
அணைக்கு வரும் தண்ணீரை விட, அணையில் இருந்து பல மடங்கு கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.
கடந்த 22-ந்தேதி 106.61 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம், படிப்படியாக சரிந்து இன்று காலை 104.60 அடியாக உள்ளது. கடந்த 4 நாட்களில் மட்டும் நீர்மட்டம் 2 அடி சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இனி வரும் நாட்களில் இதே நிலை நீடித்தால், மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் வேகமாக சரிய வாய்ப்புள்ளது.