தமிழ்நாடு செய்திகள்

மேட்டூர் அணை நீர்மட்டம் 3 நாளில் 2 அடி சரிவு

Published On 2023-01-22 09:24 IST   |   Update On 2023-01-22 09:24:00 IST
  • அணையில் இருந்து காவிரி ஆற்றில் விநாடிக்கு 10,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
  • அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து பல மடங்கு கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக சரிந்து வருகிறது.

மேட்டூர்:

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நாளுக்கு நாள் சரிந்து வருகிறது.

கடந்த 19-ம் தேதி விநாடிக்கு 1022 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று 755 கன அடியாக சரிந்தது. இன்று நீர்வரத்து சற்று அதிகரித்து 824 கன அடி வீதம் தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து காவிரி ஆற்றில் விநாடிக்கு 10,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து பல மடங்கு கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக சரிந்து வருகிறது.

கடந்த 19-ம் தேதி 108.37 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் நேற்று 107.2 அடியாக சரிந்தது.

இன்று நீர்மட்டம் மேலும் சரிந்து காலை 8 மணி நிலவரப்படி 106.61 அடியானது. இதனால் கடந்த 3 நாட்களில் மட்டும் மேட்டூர் அணை நீர்மட்டம் சுமார் 2 அடி சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இனிவரும் நாட்களில் இதே நிலை நீடித்தால் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் வேகமாக சரிய வாய்ப்புள்ளது.

Tags:    

Similar News