தமிழ்நாடு செய்திகள்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 3,702 கன அடியாக சரிவு

Published On 2023-05-14 09:45 IST   |   Update On 2023-05-14 09:45:00 IST
  • மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் நீர்வரத்து விநாடிக்கு 5,253 கன அடியாக இருந்த நிலையில் நேற்று 4,489 கன அடியாக குறைந்தது.
  • அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது.

மேட்டூர்:

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், அதன் துணை நதிகளான பாலாறு, சின்னாறு, தொப்பையாறு உள்ளிட்ட பகுதிகளிலும் பெய்யும் மழையை பொறுத்து ஒகேனக்கல், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது. தற்போது இந்த பகுதிகளில் போதிய அளவில் மழை பெய்யவில்லை. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது.

மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் நீர்வரத்து விநாடிக்கு 5,253 கன அடியாக இருந்த நிலையில் நேற்று 4,489 கன அடியாக குறைந்தது.

தொடர்ந்து இன்றும் நீர்வரத்து குறைந்து விநாடிக்கு 3,702 கன அடி வீதம் தண்ணீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.

அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது. நீர் திறப்பை விட வரத்து அதிகமாக உள்ளதால், அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று 103.70 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று காலை 8 மணி அளவில் 103.82 அடியாக உயர்ந்தது.

Tags:    

Similar News