அடுத்த முயற்சிக்கு தயாராகும் கமல்!
- தேர்தலில் அவரது நிலைப்பாடு எப்படி இருக்கும்? என்பது கமல் ரசிகர்களின் கேள்வி.
- சென்னை திரும்பிவிட்ட கமல் தேர்தல் தொடர்பாக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
கமலின் அரசியல் பிரவேசம் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தும், புதிய மாற்றம் வரும் என்ற எதிர்பார்ப்பெல்லாம் ஒரு காலத்தில் இருந்தது என்னவோ உண்மை. ஆனால் அரசியல் களத்தில் மய்யம், மய்யம் கொண்ட இடத்தில் அப்படியே நிற்கிறது. பெரிய அளவில் நகரவில்லை.
இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலும் வருகிறது. இந்த தேர்தலில் அவரது நிலைப்பாடு எப்படி இருக்கும்? என்பது கமல் ரசிகர்களின் கேள்வி.
ராகுலின் நடை பயணத்தில் கலந்து கொண்டதால் காங்கிரசுடன் கூட்டணி சேரலாம் என்றும் பேசப்பட்டது. ஆனால் நடந்து முடிந்த கர்நாடக தேர்தலில் காங்கிரசுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யவும் சொல்லவில்லை. அதற்கு அவர் வெளிநாடு சென்றதை காரணம் காட்டினார்கள்.
தற்போது சென்னை திரும்பிவிட்ட கமல் தேர்தல் தொடர்பாக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். கமலை பொறுத்தவரை சினிமாவில், தான் செய்ய நினைப்பதை செய்து முடிப்பார். அதில் வெற்றி, தோல்வியை பற்றி கவலைப்படமாட்டார். அதேபோல்தான் அரசியலிலும்...! அவரிடம் பின்வாங்கும் எண்ணம் இல்லையாம்.
பாராளுமன்ற தேர்தலிலும் கட்டாயம் போட்டியிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறாராம். கூட்டணியா? இல்லையா? என்பது பற்றி மட்டும் இன்னும் உறுதியான முடிவுக்கு வரவில்லை என்கிறார்கள்.