தமிழ்நாடு

கோப்புப்படம்

விரைவில் கோதுமை பீர் அறிமுகம்

Published On 2024-04-25 05:36 GMT   |   Update On 2024-04-25 05:36 GMT
  • தினமும் 60 ஆயிரம் பெட்டிகள் விற்பனையான நிலையில் இப்போது ஒரு லட்சம் பெட்டிகள் விற்பனையாகிறது.
  • வெளிநாட்டு நிறுவனத்திடம் இருந்து முழுக்க முழுக்க கோதுமையால் தயார் செய்யப்படும் பீரை இறக்குமதி செய்ய உள்ளனர்.

சென்னை:

வெயில் சுட்டெரிக்கிறது. அதில் இருந்து தப்பிப்பது எப்படி? சமாளிப்பது எப்படி? என்று ஒவ்வொரு வரும் ஒவ்வொரு கோணத்தில் யோசிக்கிறார்கள்.

குடிமகன்களுக்கு 'தண்ணி' தாராளமாக வேண்டும். அதாவது பீர் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க வேண்டும். பீர் குடித்தால் வெயிலோடு விளையாடலாம் என்பது அவர்களின் எண்ணம்.

ஆனால் அதுவும் ஆல்கஹால்தான் என்பதை அவர்கள் கண்டு கொள்வதில்லை. அதிலும் 10 சதவீதம் வரை ஆல்கஹால் கலக்கப்படுகிறது. குடிமகன்கள் ஆர்வத்தை பூர்த்தி செய்வதற்காக தட்டுப்பாடு இல்லாமல் பீர் சப்ளை செய்ய டாஸ்மாக் நிர்வாகமும் தேவையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. தினமும் 60 ஆயிரம் பெட்டிகள் விற்பனையான நிலையில் இப்போது ஒரு லட்சம் பெட்டிகள் விற்பனையாகிறது. தற்போது 10 லட்சம் பெட்டிகள் கையிருப்பில் உள்ளன.

தற்போது டிராபிக்கல் நிறுவனத்திடம் இருந்தும் தண்டர் போல்டு, காட்பாதர் ஆகிய இருவகை பீர்கள் கொள்முதல் செய்யப்படுவதால் தட்டுப்பாட்டை சமாளிக்க முடிகிறதாம்.

இந்த நிலையில் இப்போது காப்பர் போல்டு என்ற வெளிநாட்டு நிறுவனத்திடம் இருந்து முழுக்க முழுக்க கோதுமையால் தயார் செய்யப்படும் பீரை இறக்குமதி செய்ய உள்ளனர். இந்த பீர் ரூ.190 விலைக்கு கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதுபற்றி மதுவகை ஆய்வாளர் ஒருவர் கூறியதாவது:-

பீர் வகைகள் எல்லாமே ஏதாவது ஒரு தானியத்தில் இருந்துதான் தயாராகிறது. இதில் கலக்கப்படும் வேதிப்பொருட்கள் அனைத்துமே உடலுக்கு தீங்கானதுதான்.

வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யவிருக்கும் கோதுமை தயாரிப்பான பீர் உற்பத்தி செய்ய கூடுதல் நாட்கள் ஆகும். டிராபிக்கல் பீர் விலையே ரூ.170 முதல் ரூ.180 ஆக இருக்கும் போது இறக்குமதி செய்யப்படும். பீர் விலை ரூ.230-க்கு மேல் இருப்பதற்கு வாய்ப்பு அதிகம் என்றார்.

Tags:    

Similar News