தமிழ்நாடு

சதுரகிரி கோவிலுக்கு செல்ல 4 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி

Published On 2023-08-27 04:49 GMT   |   Update On 2023-08-27 04:49 GMT
  • அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷ நாட்கள் வரும் போது சுந்தர மகாலிங்க சுவாமியை தரிசிக்க பக்தர்களுக்கு வனத்துறையினர் கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளித்து வருகின்றனர்.
  • மழை பெய்தாலோ, காட்டுத் தீ ஏற்பட்டாலோ பக்தர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்படும் என வனத்துறை தெரிவித்துள்ளது.

திருமங்கலம்:

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள சதுரகிரி சந்தன மகாலிங்கம்-சுந்தர மகாலிங்கம் கோவில் பிரசித்தி பெற்றதாகும். இந்த கோவில் அடர் வனப்பகுதியில் உள்ளது.

இதனால் அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷ நாட்கள் வரும் போது சுந்தர மகாலிங்க சுவாமியை தரிசிக்க பக்தர்களுக்கு வனத்துறையினர் கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நாளை 28-ந்தேதி பிரதோஷம் வருவதை முன்னிட்டு 4 நாட்கள் பக்தர்கள் தாணிப்பாறை கேட்டில் இருந்து மலையேறி சென்று தரிசிக்க வனத்துறை அனுமதி அளித்துள்ளது.

காலை 7 மணி முதல் 12 மணி வரை மட்டுமே பயணிகள் மலையேறிச் செல்ல அனுமதிக்கப்படுவர். பக்தர்கள் எளிதில் தீப்பற்றக்கூடிய மற்றும் கத்தி போன்ற ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. மழை பெய்தாலோ, காட்டுத் தீ ஏற்பட்டாலோ பக்தர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்படும் என வனத்துறை தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News