தமிழ்நாடு

கொரோனா பரவல் எதிரொலி- ஸ்ரீபெரும்புதூர் இளைஞர் பயிற்சி மையம் மூட உத்தரவு

Published On 2022-06-09 05:48 GMT   |   Update On 2022-06-09 09:11 GMT
  • பரிசோதனையில் மேற்கொண்டதில் இதுவரை 35 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
  • தொற்று அதிகரிப்பால் விடுதி மாணவர்கள் வீடு திரும்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு பயிற்சி மையத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது.

அங்குள்ள மொத்தம் 235 மாணவர்களுக்கு மேற்கொண்ட பரிசோதனையில் இதுவரை 35 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று அதிகரிப்பால் விடுதி மாணவர்கள் வீடு திரும்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து துணைப்பதிவாளர் கூறியதாவது:-

கொரோனா பரவலால் ஊழியர்கள், மாணவர்கள் பாதுகாப்பு கருதி மறு அறிவிப்பு வரும்வரை பயிற்சி நிறுவனம் மூடப்படும்.

விடுதியில் தங்கியுள்ள மாணவர்கள் விடுதியை உடனே காலி செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வரும் 13-ம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை ஆன்லைன் வகுப்பு நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News