தமிழ்நாடு

குன்னூர் பேருந்து விபத்தில் 8 பேர் உயிரிழப்பு- கவர்னர் ஆர்.என்.ரவி இரங்கல்

Published On 2023-09-30 21:30 GMT   |   Update On 2023-09-30 21:30 GMT
  • பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில், அதில் பயணம் செய்த பயணிகளில் 35-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
  • விபத்தில் இதுவரை எட்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

தென்காசியில் இருந்து 54 பயணிகளுடன் ஊட்டிக்குச் சென்ற சுற்றுலா பேருந்து, குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையின் மரப்பாலம் அருகே வந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.

பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில், அதில் பயணம் செய்த பயணிகளில் 35-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த பயணிகள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில் இதுவரை எட்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் பேருந்து விபத்துக்குள்ளானதற்கு இரங்கள் தெரிவித்து கவர்னர் ஆர்.என்.ரவி தனது எக்ஸ் தளத்தில் கூறி இருப்பதாவது:-

"நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே பேருந்து விபத்துக்குள்ளானதில் உயிர்கள் பறிபோனது துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. என் எண்ணங்கள் இறந்தவர்களின் குடும்பங்களுடன் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும்." இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News