தமிழ்நாடு

பேனர் வைத்த வழக்கு: அமைச்சர் ராமச்சந்திரன் மீதான வழக்கு தள்ளுபடி

Published On 2023-03-03 07:45 GMT   |   Update On 2023-03-03 07:52 GMT
  • தேர்தல் விதிமுறைகளை மீறி பிரசார பேனர் வைக்கப்பட்டதாக தற்போதைய சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், அப்போதைய கோத்தகிரி தி.மு.க ஒன்றிய செயலாளராக இருந்த வீரபத்திரன், சந்திரசேகர் ஆகியோர் மீது புகார் அளிக்கப்பட்டது.
  • வழக்கை விசாரித்த நீதிபதி, உரிய சாட்சிகள் இல்லை என கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

ஊட்டி:

கடந்த 2016-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலின் போது நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் தி.மு.க. சார்பில் பிரசார கூட்டம் நடந்தது.

இந்த பிரசாரத்தின் போது தி.மு.க சார்பில் பேனர் வைக்கப்பட்டிருந்தது. இது தேர்தல் விதிமுறை மீறல் ஆகும்.

இதையடுத்து தேர்தல் விதிமுறைகளை மீறி பிரசார பேனர் வைக்கப்பட்டதாக தற்போதைய சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், அப்போதைய கோத்தகிரி தி.மு.க ஒன்றிய செயலாளராக இருந்த வீரபத்திரன், சந்திரசேகர் ஆகியோர் மீது புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து விசாரணையும் நடைபெற்றது.

மேலும் இது தொடர்பாக வழக்கும் தொடரப்பட்டது. இது தொடர்பான வழக்கு ஊட்டி கோர்ட்டில் நடந்து வந்தது.

இந்த வழக்கு இன்று நீதிபதி தமிழ் இனியன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, உரிய சாட்சிகள் இல்லை என கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Tags:    

Similar News