தமிழ்நாடு

தமிழகத்தில் மேலும் 1,382 பேருக்கு கொரோனா தொற்று

Published On 2022-06-25 13:54 GMT   |   Update On 2022-06-25 13:54 GMT
  • கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 5,912-ல் இருந்து 6,677-ஆக உயர்ந்துள்ளது.
  • சென்னையில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 616-ல் இருந்து 607-ஆக குறைந்தது.

தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் தலைத்தூக்க ஆரம்பித்துள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

அதன்படி ஒருநாள் கொரோனா பாதிப்பு நேற்று 1,359-ல் இருந்து இன்று 1,382-ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 5,912-ல் இருந்து 6,677-ஆக உயர்ந்துள்ளது. மேலும் 617 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

சென்னையில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 616-ல் இருந்து 607-ஆக குறைந்தது. அதன்படி, செங்கல்பட்டில் 240, கோவையில் 89, திருவள்ளூரில் 83, காஞ்சிபுரத்தில் 66, தூத்துக்குடியில் 60 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News