தமிழ்நாடு

ஆந்திரா வாலிபர் இறந்த விவகாரம்- தீவட்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை

Published On 2023-08-23 09:07 GMT   |   Update On 2023-08-23 09:07 GMT
  • வாலிபர் இறந்து கிடந்த ஏரியின் அருகே மொபட், துணிகள் கிடந்தது.
  • தற்கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார் பிரேத பரிசோதனை முடிந்து உறவினர்களிடம் உடலை ஒப்படைத்தனர்.

காடையாம்பட்டி:

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே கணவாய்புதூர் ஊராட்சியில் ஏரி உள்ளது. இந்த ஏரியில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வாலிபர் ஒருவரின் உடலை மீட்ட தீவட்டிப்பட்டி போலீசார் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். வாலிபர் இறந்து கிடந்த ஏரியின் அருகே மொபட், துணிகள் கிடந்தது.

விசாரணையில் இறந்து கிடந்தவர் ஆந்திர மாநிலம் பாலசேரன் பகுதியை சேர்ந்த நாகராஜன் என்பவரது மகன் பாலசுப்பிரமணியன் (வயது 32) என்பது தெரியவந்தது. இதையடுத்து தற்கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார் பிரேத பரிசோதனை முடிந்து உறவினர்களிடம் உடலை ஒப்படைத்தனர்.

இந்த நிலையில் வாலிபர் இறப்பு குறித்து நேற்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவட்டிப்பட்டி போலீஸ் நிலையத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். வழக்கு தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்தனர். மேலும் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.

இது குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் கூறுகையில், இந்த சம்பவம் குறித்து எங்களுக்கு புகார் வந்தது. அதன்பேரில் போலீஸ் நிலையத்திற்கு வந்து விசாரணை நடத்துகிறோம் என்றனர்.

Tags:    

Similar News