தமிழ்நாடு செய்திகள்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

Published On 2024-07-19 15:47 IST   |   Update On 2024-07-19 15:47:00 IST
  • காற்றழுத்த தாழ்வு நிலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாக வாய்ப்பு.
  • காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை ஒடிசா கடற்கரை அருகே கடக்க வாய்ப்பு.

வடமேற்கு மற்றும் அதை ஒட்டிய மேற்கு மத்திய வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக மாறியது.

இந்த ஆழந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது காற்றழுத்த தாழ்வு நிலையாக உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை, நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி ஒடிசா கடற்கரை அருகே கரையை கடக்க வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு அமையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் தமிழகம், புதுச்சேரியில் உள்ள 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்ன், தூத்துக்குடி துறை முகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News