தமிழ்நாடு செய்திகள்

தாம்பரம் - நாகர்கோவில் அதிவிரைவு சிறப்பு ரெயில் ரத்து

Published On 2024-07-14 08:22 IST   |   Update On 2024-07-14 08:22:00 IST
  • நாகர்கோவிலில் இருந்து இன்று மாலை புறப்பட்டு தாம்பரம் வரும் அதிவிரைவு சிறப்பு ரெயில் ரத்து செய்யப்படுகிறது.
  • தாம்பரத்தில் இருந்து நாளைகாலை புறப்பட்டு நாகர்கோவில் செல்லும் அதிவிரைவு சிறப்பு ரெயில் ரத்து செய்யப்படுகிறது.

சென்னை:

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாகர்கோவிலில் இருந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4.35 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் அதிவிரைவு சிறப்பு ரெயில் (வண்டி எண்.06012) ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கமாக, தாம்பரத்தில் இருந்து நாளை (திங்கட்கிழமை) காலை 7.45 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவில் செல்லும் அதிவிரைவு சிறப்பு ரெயில் (06011) ரத்துசெய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News