தமிழ்நாடு

சனாதனத்தை ஒழிப்பதாக பேச்சு: இந்துகோவில் உண்டியலில் கை வைக்கலாமா? அமைச்சர் உதயநிதிக்கு நடிகை கஸ்தூரி கேள்வி

Published On 2023-09-04 07:35 GMT   |   Update On 2023-09-04 07:37 GMT
  • டெங்கு, மலேரியா உங்கள் குடும்பத்திலேயே முற்றியிருக்கிறதே. அவர்களை என்ன பண்ணுறதா உத்தேசம்?
  • கோவில்கள் கொடியவர்களின் கூடாரம் ஆகி விடக்கூடாது என்று கலைஞர் அன்றே சொன்னார்.

சென்னை:

சனாதனதர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. நடிகையும் சமூக ஆர்வலருமான நடிகை கஸ்தூரி உதயநிதி ஸ்டாலினை விமர்சித்துள்ளார்.

டெங்கு, மலேரியா உங்கள் குடும்பத்திலேயே முற்றியிருக்கிறதே. அவர்களை என்ன பண்ணுறதா உத்தேசம்? ஊருக்கு உபதேசம் அதுவே திராவிடிய பரம்பரை யுக்தி சனாதனத்தின் மீது அவ்வளவு வெறுப்பு உள்ளவர்களுக்கு இந்து கோவில் சொத்து மட்டும் கேட்குதோ? முதலில் உண்டியலில் இருந்து கையை எடுங்க.

கோவில்கள் கொடியவர்களின் கூடாரம் ஆகி விடக்கூடாது என்று கலைஞர் அன்றே சொன்னார். இதைத்தான் சொன்னார் போலும்.

சனாதன எதிர்ப்பில் தி.க.வை. போல் தி.மு.க.வும் உறுதியாக இருந்தால் முதலில் இந்தியா கூட்டணியை விட்டு வெளியேற வேண்டும். ஏனெனில் பல சனாதனவாதிகள்தான் அந்த கூட்டணியில் இருக்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News