தமிழ்நாடு

கோடை கால குடிநீர் பற்றாக்குறையை சமாளிப்பது எப்படி?: தலைமைச்செயலாளர் இன்று ஆலோசனை

Published On 2024-04-23 05:09 GMT   |   Update On 2024-04-23 05:09 GMT
  • சுட்டெரிக்கும் வெயில் கொளுத்தி வருவதால் குடிநீர் பயன்பாடு அதிகரித்து உள்ளது.
  • ஆலோசனையில் 12 மாவட்ட கலெக்டர்கள் பங்கேற்க உள்ளனர்.

சென்னை:

கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் குடிநீர் வழங்கும் ஏரிகளில் தண்ணீர் குறைந்து கொண்டே வந்தாலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என்று குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

சுட்டெரிக்கும் வெயில் கொளுத்தி வருவதால் குடிநீர் பயன்பாடு அதிகரித்து உள்ளது. வீடுகளுக்கு குழாய் மூலமும் லாரிகள் வழியாகவும் தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது. குழாய் மூலம் தண்ணீர் கொடுக்க முடியாத பகுதிகளில் குடிநீர் தொட்டிகளில் தண்ணீர் லாரிகள் மூலம் கொண்டு சென்று நிரப்பி வருகிறது.

இந்நிலையில் கோடை கால குடிநீர் பற்றாக்குறையை சமாளிப்பது தொடர்பாக தலைமைச்செயலாளர் சிவதாஸ் மீனா தலைமையில் இன்று தலைமைச்செயலகத்தில் பிற்பகல் 3 மணிக்கு ஆலோசனை நடைபெற உள்ளது. ஆலோசனையில் 12 மாவட்ட கலெக்டர்கள் பங்கேற்க உள்ளனர்.

கோடை காலத்தில் ஏற்படும் குடிநீர் பற்றாக்குறையை சமாளித்து தடையின்றி குடிநீர் விநியோகிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்படும் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

Similar News