தமிழ்நாடு

மாநில கைப்பந்து போட்டி: ஐ.ஓ.பி. அணிக்கு 2-வது வெற்றி

Published On 2024-03-25 06:21 GMT   |   Update On 2024-03-25 06:21 GMT
  • கைப்பந்து போட்டி சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.
  • தமிழ்நாடு போலீஸ் 2-0 என்ற கணக்கில் டாக்டர் சிவந்தி கிளப்பையும் தோற்கடித்தன.

நெல்லை நண்பர்கள் கைப்பந்து கிளப், டாக்டர் சிவந்தி கிளப் சார்பில் பி.ஜான் மற்றும் ஏ.கே.சித்திரை பாண்டியன் நினைவு மாநில அளவிலான கைப்பந்து போட்டி சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.

'ஏ' பிரிவில் நடந்த ஆட்டத்தில் ஐ.ஓ.பி. 25-22, 25-19 என்ற கணக்கில் எஸ்.டி.ஏ.டி.யை வீழ்த்தி 2-வது வெற்றியை பெற்றது. இந்த பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் வருமானவரி 2-0 என்ற கணக்கில் தமிழ்நாடு போலீசை வீழ்த்தி 2-வது வெற்றியை பெற்றது.

'பி' பிரிவில் நடந்த ஆட்டத்தில் எஸ்.ஆர்.எம். 26-24, 25-16 என்ற கணக்கில் இந்தியன் வங்கியை தோற்கடித்தது. இந்தியன் வங்கி அணிக்கு 2-வது தோல்வி ஏற்பட்டது. மற்றொரு போட்டி டி.ஜி. வைஷ்ணவா 2-1 என்ற கணக்கில் ஜி.எஸ்.டி.யை வீழ்த்தி 2-வது வெற்றியை பெற்றது.

பெண்கள் பிரிவில் ஐ.சி.எப்.2-0 என்ற கணக்கில் எஸ்.ஆர்.எம்.அணியையும், தமிழ்நாடு போலீஸ் 2-0 என்ற கணக்கில் டாக்டர் சிவந்தி கிளப்பையும் தோற்கடித்தன.

Tags:    

Similar News