தமிழ்நாடு செய்திகள்

தென் தமிழகம், டெல்டா மாவட்டங்களில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்

Published On 2023-02-25 13:14 IST   |   Update On 2023-02-25 13:14:00 IST
  • தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் வறண்ட வானிலையே நிலவும்.
  • அடுத்த 48 மணி நேரத்திற்கு பொதுவாக வானம் தெளிவாக காணப்படும்.

சென்னை:

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:

* தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் வறண்ட வானிலையே நிலவும்.

* தென் தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் வரும் 27, 28 தேதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

* வரும் மார்ச் 1ந்தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.

* அடுத்த 48 மணி நேரத்திற்கு பொதுவாக வானம் தெளிவாக காணப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News