தமிழ்நாடு செய்திகள்

6 பேர் விடுதலையை எதிர்க்கும் மத்திய அரசின் சீராய்வு மனுவுக்கு எதிராக வாதிடுவோம்- சீமான்

Published On 2022-11-18 13:36 IST   |   Update On 2022-11-18 13:36:00 IST
  • 6 பேர் விடுதலை தொடர்பாக மத்திய அரசு தாக்கல் செய்துள்ள சீராய்வு மனுவை எதிர்த்து வாதிடுவோம்.
  • தி.மு.க.வுக்கும், நாம் தமிழர் கட்சிக்கும் இடையே நடப்பது பங்காளி சண்டை.

சென்னை:

சென்னை வளசரவாக்கத்தில் உள்ள நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் வ.உ.சிதம்பரனார் நினைவு நாளையொட்டி அவரது படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினார்.

பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

6 பேர் விடுதலை தொடர்பாக மத்திய அரசு தாக்கல் செய்துள்ள சீராய்வு மனுவை எதிர்த்து வாதிடுவோம். மத்திய அரசின் மனு அவசியமற்றது. இந்த விடுதலை நீண்ட நாள் போராட்டமாகும்.

6 பேர் விடுதலை விவகாரத்தில் எனக்குள்ள வலி அண்ணாமலைக்கு இருக்க வாய்ப்பு இல்லை. அது அவர்களின் கட்சி கோட்பாடு. விடுதலை செய்யப்பட்டவர்களை இலங்கைக்கு அனுப்பக்கூடாது. அவர்கள் விரும்பும் நாட்டுக்கு அனுப்ப வேண்டும்.

தி.மு.க.வுக்கும், நாம் தமிழர் கட்சிக்கும் இடையே நடப்பது பங்காளி சண்டை. இதற்காக பாரதிய ஜனதாவை எப்படி உள்ளே விட முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News