தமிழ்நாடு

ஈரோடு மாவட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு போலீஸ் தடை

Published On 2022-09-29 07:32 GMT   |   Update On 2022-09-29 07:32 GMT
  • ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு அனுமதி மறுத்து ஈரோடு மாவட்ட போலீசார் தடை விதித்து உள்ளனர்.
  • ஈரோடு மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

ஈரோடு:

மகாத்மா காந்தி பிறந்தநாளையொட்டி வருகிற 2-ந் தேதி ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, கோபிசெட்டிபாளையத்தில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு அனுமதி மறுத்து ஈரோடு மாவட்ட போலீசார் தடை விதித்து உள்ளனர். சட்டம் ஒழுங்கு பிரச்சினையை கருத்தில் கொண்டு தடை விதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் ஈரோடு மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. மேலும் சோதனை சாவடிகளும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News