தமிழ்நாடு

பேஸ்ட் வடிவில் மறைத்து எடுத்து வரப்பட்ட தங்கம்

திருச்சி விமான நிலையத்தில் ரூ.55 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்: பெண் கைது

Published On 2023-10-20 07:10 GMT   |   Update On 2023-10-20 07:10 GMT
  • கடந்த சில தினங்களாக கிராம் கணக்கில் பறிமுதல் செய்யப்பட்டு வந்த தங்கம் தற்போது கிலோ கணக்கில் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
  • விமானத்தில் வந்த பணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர்.

கே.கே. நகர்:

திருச்சி விமான நிலையத்திற்கு வெளிநாடுகளான மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், துபாய், இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு இயக்கப்படும் விமானங்களில் வரும் பயணிகள் அதிக அளவில் தங்கத்தை கடத்தி வருவதும் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர்கதையாக இருந்து வருகிறது.

அந்த வகையில் கடந்த சில தினங்களாக கிராம் கணக்கில் பறிமுதல் செய்யப்பட்டு வந்த தங்கம் தற்போது கிலோ கணக்கில் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று நள்ளிரவு ஒரு மணிக்கு சிங்கப்பூரிலிருந்து ஸ்கூட் விமானம் திருச்சி வந்தது.

இந்த விமானத்தில் வந்த பணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் பயணம் செய்த பெண் பயணி ஒருவரை தனியே அழைத்து சென்று சோதனை செய்தபோது அவர் தனது உள்ளாடையின் பின்பகுதியில் தங்கத்தை பேஸ்ட் வடிவில் மறைத்து எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது .

விசாரணையில் அந்த பெண் பயணி பாண்டிச்சேரியை சேர்ந்தவர் என்று தெரியவந்தது. இதை தொடர்ந்து அவரிடம் இருந்து 909.5 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் அவரை கைது செய்து தொடர் விசாரணை மேற்கொண்டனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ. 55.07 லட்சம் ஆகும்.

Tags:    

Similar News