தமிழ்நாடு

ராயபுரம் மனோ அ.தி.மு.க. அமைப்பு செயலாளராக நியமனம்

Published On 2023-09-28 09:17 GMT   |   Update On 2023-09-28 09:17 GMT
  • அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ராயபுரம் மனோவை அமைப்பு செயலாளராக நியமனம் செய்துள்ளார்.
  • ராயபுரம் மனோவுக்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் சால்வைகள் அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

ராயபுரம்:

அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வில் புதிதாக மாவட்ட செயலாளர்களையும் அமைப்பு செயலாளர்களையும் நியமனம் செய்துள்ளார்.

அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளராக இருந்த ராயபுரம் ஆர்.மனோ அ.தி.மு.க. அமைப்புச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இவரை அமைப்பு செயலாளராக நியமனம் செய்துள்ளார்.

அ.தி.மு.க. அமைப்பு செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள ராயபுரம் மனோவுக்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் சால்வைகள் அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

Tags:    

Similar News