தமிழ்நாடு செய்திகள்

ராமாபுரத்தில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் தற்கொலை

Published On 2022-10-05 12:42 IST   |   Update On 2022-10-05 12:42:00 IST
  • தலைமை ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் நடராஜன்.
  • நடராஜன் விஷம் குடித்து தற்கொலை செய்து இருப்பது தெரிய வந்தது.

சென்னை:

சென்னை ராமாபுரம் கோத்தாரி நகர், 2-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் நடராஜன் (வயது 83). தலைமை ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர் இரவு வீட்டின் பின்பகுதியில் மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை மீட்டு சிகிச்சைக்காக நெசப்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நடராஜன் பரிதாபமாக உயிரிழந்தார். அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து இருப்பது தெரிந்தது.

நடராஜனின் தற்கொலைக்கான காரணம் குறித்து ராமாபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News