தமிழ்நாடு செய்திகள்

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் கொதிகலன் குழாயில் பழுது- 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

Published On 2023-04-10 10:28 IST   |   Update On 2023-04-10 10:28:00 IST
  • 1-வது யுனிட்டில் கொதிகலன் குழாயில் பழுது ஏற்பட்டது.
  • பழுது சரி செய்யப்பட்ட பிறகு முதல் யுனிட்டில் இருந்து மின் உற்பத்தி மீண்டும் தொடங்கும்.

மேட்டூர்:

மேட்டூர் பழைய அனல்மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் திறன் கொண்ட 4 யுனிட்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த 4 யுனிட்கள் மூலம் 840 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 8-ந் தேதி இரவு பழைய அனல்மின் நிலையத்தின் 1-வது யுனிட்டில் கொதிகலன் குழாயில் பழுது ஏற்பட்டது. இதன் காரணமாக 210 மெகாவாட் மின் உற்பத்தி தடைபட்டுள்ளது.

மற்ற யுனிட்டுகளில் தொடர்ந்து மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. கொதிகலன் குழாயில் ஏற்பட்ட பழுது சரி செய்யப்பட்ட பிறகு முதல் யுனிட்டில் இருந்து மின் உற்பத்தி மீண்டும் தொடங்கும் என்று மேட்டூர் அனல்மின் நிலைய பொறியாளர் தெரிவித்தார்

Tags:    

Similar News