தமிழ்நாடு

ராகுல் காந்தியின் தமிழக பயணம் ரத்து

Published On 2023-05-20 06:43 GMT   |   Update On 2023-05-20 06:43 GMT
  • ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் நினைவிடத்தில் பல்வேறு தலைவர்களும் வந்து அஞ்சலி செலுத்த உள்ளனர்.
  • ராஜீவ் காந்தியின் நினைவிடத்திற்கு ராகுல் காந்தி நாளை வருவதாக இருந்தது.

சென்னை:

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினம் நாளை (மே 21-ம் தேதி) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் நினைவிடத்தில் பல்வேறு தலைவர்களும் வந்து அஞ்சலி செலுத்த உள்ளனர்.

ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நாளை வருவதாக இருந்தது. ஆனால் அவரது பயணம் ரத்து செய்யப்பட்டிருப்பதாக இன்று தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

Similar News