தமிழ்நாடு

பொங்கல் பண்டிகை எதிரொலி- பழனி உழவர் சந்தையில் 30 டன் காய்கறிகள் விற்பனை

Published On 2023-01-13 05:38 GMT   |   Update On 2023-01-13 05:38 GMT
  • கொடைக்கானல் மலைப்பகுதியில் விளைவிக்கப்படும் காய்கறிகள் பழனி உழவர் சந்தைக்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
  • பெரும்பாலான காய்கறிகள் விலை குறைந்துள்ளதால் மக்களும் மகிழ்ச்சியுடன் வாங்கி சென்றனர்.

பழனி:

பழனி உழவர் சந்தைக்கு தினந்தோறும் பல கிராமங்களில் இருந்து ஏராளமான விவசாயிகள் தாங்கள் விளைவித்த காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இதுமட்டுமின்றி கொடைக்கானல் மலைப்பகுதியில் விளைவிக்கப்படும் காய்கறிகளும் பழனி உழவர் சந்தைக்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

தினந்தோறும் 15 முதல் 20 டன் வரை இங்கு காய்கறிகள் விற்பனையாகிறது. தற்போது போகி பண்டிகை, பொங்கல் மற்றும் தொடர்விடுமுறை காரணமாக இன்று ஒரேநாளில் 30 டன் காய்கறிகள் விற்பனை யானது. தினந்தோறும் சுமார் 2000 பேர் உழவர்சந்தைக்கு வந்து சென்ற நிலையில் இன்று சுமார் 3500-க்கும் மேற்பட்டோர் சந்தைக்கு வந்துள்ளதாக நிர்வாக அலுவலர் வினோத்குமார் தெரிவித்தார்.

தற்போது பெரும்பாலான காய்கறிகள் விலை குறைந்துள்ளதால் மக்களும் மகிழ்ச்சியுடன் அதனை வாங்கி சென்றனர். தாங்கள் கொண்டு வந்த காய்கறிகள் அனைத்தும் விற்று தீர்ந்ததால் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர். ஒரு சில காய்கறிகளின் விலை மட்டும் உயர்ந்திருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதனால் இன்று பழனி உழவர்சந்தையில் விற்பனை களைகட்டியது.

Tags:    

Similar News