தமிழ்நாடு

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை- ஆசிரியர் போக்சோவில் கைது

Published On 2022-10-14 05:42 GMT   |   Update On 2022-10-14 05:42 GMT
  • ஆசிரியர் பள்ளியில் படிக்கும் 9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.
  • போலீசார் ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.

கம்பம்:

தேனி மாவட்டம் கூடலூரை சேர்ந்தவர் ராஜேஷ்கண்ணன்(35). இவர் கம்பத்தில் உள்ள தனியார் பள்ளியில் சமூகஅறிவியல் பாட ஆசிரியராக பணியாற்றி வந்தார். கடந்த சில நாட்களாக இதேபள்ளியில் படிக்கும் 9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.

இதனைதொடர்ந்து மாணவியின் பெற்றோர் மற்றும் அவரது உறவினர்கள் பள்ளியில் திரண்டு சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தனர். இதனைதொடர்ந்து கம்பம் போலீஸ் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.

Tags:    

Similar News