ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார் பிரதமர் மோடி
- திருச்சியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி ராமேஷ்வரம் வந்தடைந்தார்.
- சாலை மார்க்கமாக பிரதமர் மோடி ராமகிருஷ்ணா மடத்திற்கு சென்றனர்.
ஆன்மிக சுற்றுப்பயணமாக 3 நாள் தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி நேற்று சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் "கேலோ இந்தியா" போட்டியை தொடங்கி வைத்தார்.
இன்று திருச்சி சென்ற பிரதமர் மோடி ஸ்ரீரங்கம் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
பின்னர், திருச்சியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்ட பிரதமர் மோடி ராமேஷ்வரம் வந்தடைந்தார்.
அங்கிருந்து காரில் புறப்பட்ட பிரதமர் மோடியை வரவேற்க வழிநெடுகிலும் தொண்டர்கள் மேள தாளங்களுடன் வரவேற்பு அளித்தனர்.
சாலை மார்க்கமாக பிரதமர் மோடி ராமகிருஷ்ணா மடத்திற்கு சென்றனர். அங்கு சற்று இளைப்பாறிவிட்டு அங்கிருந்து கிழக்கு வாசல் வழியாக ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலுக்கு சென்றார். அங்கு, கோவிலில் உள்ள 22 புண்ணிய தீர்த்தங்களில் பிரதமர் மோடி நீராடினார்.
பிறகு, பிரதமர் மோடி, ருத்ராட்ச மாலைகள் அணிந்து கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பிரதமருக்கு தீபாராதனை மற்றும் தீர்த்தம் வழங்கப்பட்டது. மேலும், அங்கு பிரதமருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை செய்யப்பட்டது.
பிரதமர் மோடி வருகையையொட்டி ராமேஸ்வரத்தில் 3 அடுக்கு பாடுகாப்பு போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.