தமிழ்நாடு

பழவேற்காடு கோட்டைக்குப்பம் ஊராட்சியில் குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் அவதி

Published On 2023-07-29 07:03 GMT   |   Update On 2023-07-29 07:03 GMT
  • 5 கிலோமீட்டர் தாண்டி இருசக்கர வாகனத்தில் தண்ணீர் பிடித்து வருகின்றனர்.
  • தரைமட்ட நீர் தேக்க தொட்டி கட்டப்பட்டு ஆறு மாதம் ஆகியும் பயன்பாட்டிற்கு வரவில்லை எனவும் வேதனையுடன் தெரிவித்தனர்.

பொன்னேரி:

பொன்னேரி அடுத்த பழவேற்காடு கோட்டைக்குப்பம் ஊராட்சியில் தோனிரவு, ஜமீலாபாத், செஞ்சியம்மன் நகர், உட்பட்ட கிராமத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரும் நிலையில் அப்பகுதியில் தண்ணீர் உப்பாக காணப்படுவதால் வீடுகளுக்கு கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் பொன்னேரி அடுத்த அரசூர் ஏரியில் இருந்து 15 கிலோமீட்டர் குழாய் மூலம் பழவேற்காடு கீழ்நிலைத் தொட்டியில் சேமிக்கப்பட்டு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து தெரு குழாய் வழியாக வீடுகளுக்கு குடிநீர் அனுப்பப்படுகின்றன.

அவ்வாறு செல்லும் குடிநீர் சரியாக வராததால் குடிநீரின்றி மக்கள், அதிக விலை கொடுத்து கேன் தண்ணீர் வாங்கியும் மற்றும் 15 கிலோமீட்டர் தாண்டி இருசக்கர வாகனத்தில் தண்ணீர் பிடித்து வருகின்றனர்.

அப்பகுதி மக்கள் குடி தண்ணிக்காக பெரிதும் அவதிப்பட்டு வருவதாகவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர். மேலும் தரைமட்ட நீர் தேக்க தொட்டி கட்டப்பட்டு ஆறு மாதம் ஆகியும் பயன்பாட்டிற்கு வரவில்லை எனவும் வேதனையுடன் தெரிவித்தனர்.

Tags:    

Similar News