தமிழ்நாடு செய்திகள்
null
கனமழை காரணமாக இன்றும் ஆரஞ்சு எச்சரிக்கை தொடரும்.. வானிலை ஆய்வு மையம்
- தமிழ்நாட்டில் இன்று கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தென் மேற்கு பருவ மழையானது கேரளாவை தொடர்ந்து மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களில் பெய்து வருகிறது.
நீலகிரி, கோவை, மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் இன்று கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 12-20 செ.மீ மழை பொழிய வாய்ப்பு உள்ளதால், 2-வது நாளாக இன்றும் ஆரஞ்சு எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நேற்று இரவு திடீரென மழை பெய்தது. அதனை தொடர்ந்து இன்று காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது.