தமிழ்நாடு

மதுரை விமான நிலையத்தில் பிரதமர் மோடியுடன் ஓ.பி.எஸ். மகன், அண்ணாமலை உள்பட 39 பேர் சந்திப்பு

Published On 2024-01-21 08:17 GMT   |   Update On 2024-01-21 08:17 GMT
  • ஸ்ரீரங்கம் சென்ற பிரதமர் மோடி பிற்பகலில் ராமேசுவரம் வந்தார்.
  • ராமேசுவரத்தில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்ட பிரதமர் மோடி 12.15 மணிக்கு மதுரை விமான நிலையத்தை வந்தடைந்தார்.

மதுரை:

கேலோ இந்தியா விளையாட்டு போட்டி தொடக்க விழா மற்றும் ஆன்மீக பயணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி 19-ந்தேதி மாலை சென்னை வருகை தந்தார். நேற்று ஸ்ரீரங்கம் சென்ற அவர், பிற்பகலில் ராமேசுவரம் வந்தார்.

இரவில் அங்கு தங்கிய பிரதமர் மோடி இன்று அரிச்சல்முனை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று தரிசனம் மற்றும் வழிபாடுகளில் ஈடுபட்டார். 3 நாள் பயணத்தை முடித்துக்கொண்டு இன்று பகல் 12.40 மணிக்கு மதுரையில் இருந்து சிறப்பு விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.

முன்னதாக 11.50 மணிக்கு ராமேசுவரத்தில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்ட பிரதமர் மோடி 12.15 மணிக்கு மதுரை விமான நிலையத்தை வந்தடைந்தார். டெல்லி புறப்படும் முன்பாக அவர் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய மந்திரி எல்.முருகன், ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத், தர்மர் எம்.பி. உள்ளிட்ட 39 பேரை சந்தித்தார்.

பின்னர் அவர் தனி விமானத்தில் டெல்லி புறப்பட்டார்.

Tags:    

Similar News