தமிழ்நாடு

புரசைவாக்கம் தானா தெருவில் திடீர் ஆக்கிரமிப்பு கடைகளால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருவதை காணலாம்.

புரசைவாக்கத்தில் ஆக்கிரமிப்பு கடைகள்- தானா தெருவில் வாகன ஓட்டிகள் அவதி

Published On 2022-10-12 07:30 GMT   |   Update On 2022-10-12 07:30 GMT
  • புரசைவாக்கம் சாலையில் இருபுறமும் ஆக்கிரமிக்கப்பட்டு நடைபாதை கடைகள் ஏராளமாக அமைக்கப்பட்டு உள்ளன.
  • ஆக்கிரமிப்பு கடைகளால் புரசைவாக்கம் பகுதி முழுவதும் காலை, மாலை நேரங்களில் கடும் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

சென்னை:

சென்னை புரசைவாக்கம் தானா தெரு சாலையோர நடைபாதைகளில் திடீர் ஆக்கிரமிப்பு கடைகளால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

சென்னை புரசைவாக்கம் தானா தெரு சாலையில் திடீரென ஆக்கிரமிப்பு நடைபாதை கடைகள் பெருகி வருகின்றன. இந்த ஆக்கிரமிப்பு கடைகளால் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு உள்ளது.

மேலும் புரசைவாக்கம் சாலையில் இருபுறமும் ஆக்கிரமிக்கப்பட்டு நடைபாதை கடைகள் ஏராளமாக அமைக்கப்பட்டு உள்ளன.

இந்த நடைபாதை பகுதியில் ஏராளமான தள்ளுவண்டி கடைகள் மற்றும் பழக்கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதனால் சாலை ஓர பகுதிகளில் நடந்து செல்ல பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. மேலும் அப்பகுதியில் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். போக்குவரத்து நெரிசலால சிறுசிறு விபத்துக்களும் ஏற்பட்டு வருகின்றன.

இந்த ஆக்கிரமிப்பு கடைகளால் புரசைவாக்கம் பகுதி முழுவதும் காலை, மாலை நேரங்களில் கடும் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

எனவே இந்த திடீர் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை ஒழுங்குபடுத்தி போக்குவரத்து இடையூறு ஏற்படாத வண்ணம் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

Similar News