தமிழ்நாடு

என்னுடைய வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது: ஓ.பன்னீர்செல்வம்

Published On 2024-04-19 03:53 GMT   |   Update On 2024-04-19 03:53 GMT
  • 10 ஆண்டு சிறப்பான ஆட்சியை தந்த பிரதமர் மோடி தான் 3ம் முறையாக பிரதமராக வர வேண்டும்.
  • என்னுடைய வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

தேனி:

இந்தியாவில் 18-வது பாராளுமன்ற தேர்தல் இன்று தொடங்கி ஜூன் மாதம் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் தமிழகம், புதுச்சேரி உள்பட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் முதல் கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தேனி பெரியகுளம் பகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாக்களித்தார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:

கே: தேர்தல் முடிவு எப்படி இருக்கும்?

நடைபெற்றுக்கொண்டிருக்கக்கூடிய இந்திய தேசத்தினுடைய தலைவிதியை யார் நிர்ணயிக்கின்ற தேர்தலாக பாராளுமன்ற தேர்தல் இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

10 ஆண்டு சிறப்பான ஆட்சியை தந்த பிரதமர் மோடி தான் 3ம் முறையாக பிரதமராக வர வேண்டும் என்று இந்தியா முழுவதும் உள்ள பொதுமக்கள் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள். உறுதியாக 3ம் முறையாக பிரதமர் மோடிதான் வருவார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

கே: உங்களது வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?

என்னுடைய வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. உறுதியாக நான் வெற்றி பெறுவேன் என்று கூறினார்.

Tags:    

Similar News