தமிழ்நாடு

அண்ணா பட்டு கூட்டுறவு சங்கத்தில் நவராத்திரி கொலு

Published On 2022-10-03 09:12 GMT   |   Update On 2022-10-03 09:12 GMT
  • தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில் இருந்து இந்த சங்கத்தை தேடி வந்து ஏராளமான வாடிக்கையாளர்கள் வந்து விரும்பி வாங்கி செல்கின்றனர்.
  • பட்டு கூட்டுறவு சங்க விற்பனை கூடத்தில் நவராத்திரி கொலு பொம்மைகள் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் காந்திரோட்டில் அண்ணா பட்டு கூட்டுறவு சங்கம் இயங்கி வருகிறது. இந்த சங்கத்தில் கைதேர்ந்த நெசவாளர்களை கொண்டு தரமான ஜரிகை வேலைப்பாடுகளுடன் பட்டு சேலைகள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வந்து கொண்டிருக்கிறது. மேலும் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில் இருந்து இந்த சங்கத்தை தேடி வந்து ஏராளமான வாடிக்கையாளர்கள் வந்து விரும்பி வாங்கி செல்கின்றனர்.

இந்த பட்டு கூட்டுறவு சங்க விற்பனை கூடத்தில் நவராத்திரி கொலு பொம்மைகள் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. இந்த நவராத்திரி கொலுவை தீபாராதனை காட்டி சங்க தலைவரும், அ.தி.மு.க. நிர்வாகியுமான விஸ்வநாதன் தொடங்கி வைத்து வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பிரசாதங்களை வழங்கினர். இதில் தமிழக கைத்தறி துறை இணை இயக்குனர் செல்வம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News