தமிழ்நாடு

இந்தியாவில் வாகன உற்பத்தி துறையில் தமிழகம் முன்னிலை: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா

Published On 2024-01-07 05:20 GMT   |   Update On 2024-01-07 05:20 GMT
  • தொழில் துறையில் தமிழகம் முன்னிலையில் உள்ளது.
  • வேலைக்கு செல்லும் பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு.

சென்னை:

உலக முதலீட்டாளர் மாநாட்டை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வரவேற்புரை ஆற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

* தொழில் துறையில் தமிழகம் முன்னிலையில் உள்ளது.

* இந்தியாவில் வாகன உற்பத்தி துறையில் தமிழகம் முன்னிலையில் உள்ளது.

* ஏற்றுமதிக்கான குறியீட்டு எண்ணில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.

* வேலைக்கு செல்லும் பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு.

* நான் முதல்வன் திட்டத்தின் மூலம் இளைஞர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.

* தமிழ்நாட்டில் 230 பேருக்கு ஒரு மருத்துவர் என்ற விகிதத்தில் உள்ளோம்.

* தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளும் சீராக வளர வேண்டும் என்பது முதல்வரின் இலக்கு.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News