தமிழ்நாடு
பொது பாடத்திட்டத்தை மாற்ற உயர்கல்வித்துறைக்கு அதிகாரம் உள்ளது: அமைச்சர் பொன்முடி
- பொது பாடத்திட்டத்தை கல்லூரி முதல்வர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.
- உயர்கல்வியின் வளர்ச்சியே எங்களுக்கு நோக்கம்.
சென்னை:
தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
பொது பாடத்திட்டத்தை கல்லூரி முதல்வர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். பொது பாடத்திட்டத்தால் எந்த பிரச்சனையும் இல்லை.
அனைவரையும் ஆலோசித்து தான் முடிவு எடுக்கப்பட்டது. பாடத்திட்டத்தை மாற்ற உயர்கல்வித்துறைக்கு அதிகாரம் உள்ளது.
மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பயனளிக்கும். இதில் எவ்வித பிரச்சனையும் இல்லை. உயர்கல்வியின் வளர்ச்சியே எங்களுக்கு நோக்கம்.
கல்வியாளர்களை கலந்தாலோசிக்காமல் முடிவு எடுத்ததாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும் விளக்கம் அளிக்க தயாராக இருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.