தமிழ்நாடு

அரசு நிறுவனம் சார்பில் தீபாவளி லேகியம்: அமைச்சர் மா.சுப்ரமணியன் அறிமுகப்படுத்தினார்

Published On 2023-11-09 08:43 GMT   |   Update On 2023-11-09 08:43 GMT
  • முதல்முறையாக தமிழக அரசு நிறுவனமான டேம் கால் இந்த ஆண்டு தீபாவளி லேகியத்தை தயாரித்துள்ளது.
  • நமது பாரம்பரிய மருத்துவ முறைகளால் எந்த பக்க விளைவுகளும் கொடுக்காத முறையில் தீபாவளி லேகியத்தை நிறுவனம் தயாரித்துள்ளது.

சென்னை:

தீபாவளி பண்டிகையின்போது இனிப்பு மற்றும் கார வகைகளை பொதுமக்கள் விரும்பி சாப்பிடுவார்கள். இதில் பயன்படுத்தப்படும் எண்ணெய் மற்றும் மூலப்பொருட்கள் இது தவிர அதிகமாக சாப்பிடுவது போன்ற பிரச்சினைகளால் வயிற்று கோளாறுகள் உருவாகும்.

கடைகளில் தீபாவளி லேகியம் விற்கப்படும் முதல்முறையாக தமிழக அரசு நிறுவனமான டேம் கால் இந்த ஆண்டு தீபாவளி லேகியத்தை தயாரித்துள்ளது.

இந்த லேகியத்தை ஆயுர்வேத தினத்தை ஒட்டி இன்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிமுகப்படுத்தினார். பின்னர் அவர் கூறியதாவது:-

நமது பாரம்பரிய மருத்துவ முறைகளால் இந்த பக்க விளைவுகளும் கொடுக்காத முறையில் தீபாவளி லேகியத்தை நிறுவனம் தயாரித்துள்ளது.

பொதுமக்கள் இதை வாங்கி பயன்படுத்தலாம் தமிழகம் முழுவதும் டைம் கால் விற்பனை கடைகளில் இன்று முதல் கிடைக்கும் என்றார். நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை செயலாளர் கஹந்தி சிங் பேடி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News