தமிழ்நாடு செய்திகள்
மேட்டூர் அணை நீர்மட்டம் 101.49 அடியாக சரிவு
- காலை நிலவரப்படி விநாடிக்கு 334 அடியாக வந்து கொண்டிருக்கிறது.
- அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
மேட்டூர்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைவாக உள்ளது. நேற்று விநாடிக்கு 346 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 334 அடியாக வந்து கொண்டிருக்கிறது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர் வரத்தை விட திறப்பு அதிகமாக உள்ளதால் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது. நேற்று 101.59 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், இன்று காலை 101.49 அடியாக சரிந்தது.