தமிழ்நாடு

2ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்ட பணிகள்: அஜந்தா மேம்பாலத்தை இடிக்கும் பணி மும்முரம்

Published On 2024-01-23 04:27 GMT   |   Update On 2024-01-23 04:27 GMT
  • அஜந்தா மேம்பாலத்தை இடிக்கும் பணி நேற்று நள்ளிரவில் தொடங்கியது.
  • மயிலாப்பூர், மந்தைவெளி, அடையாறுக்கு செல்லும் வாகனங்கள் வி.பி.ராமன் சாலையில் இயக்கப்படுகிறது.

சென்னை:

சென்னை மெட்ரோ ரெயில் 2ம் கட்ட வழித்தடங்கள் அமைக்கும் பணிகளுக்காக சென்னை ராயப்பேட்டை ராதாகிருஷ்ணன் சாலையில் அமைந்துள்ள அஜந்தா மேம்பாலத்தை இடிக்கும் பணி நேற்று நள்ளிரவில் தொடங்கியது. எந்த ஒரு அசம்பாவிதம் ஏற்படாமல் இருப்பதற்காக அப்பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

2 பொக்லைன் இயந்திரங்களின் உதவியுடன் மேம்பாலத்தை இடிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேம்பாலம் இடிப்பு பணி காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து மயிலாப்பூர், மந்தைவெளி, அடையாறுக்கு செல்லும் வாகனங்கள் வி.பி.ராமன் சாலையில் இயக்கப்படுகிறது.

Tags:    

Similar News