தமிழ்நாடு

எடப்பாடி பழனிசாமி மீது பொய்வழக்கு போட்டு இருப்பது கண்டனத்திற்குரியது- செங்கோட்டையன் பேட்டி

Published On 2023-03-13 08:28 GMT   |   Update On 2023-03-13 08:28 GMT
  • எடப்பாடி கே.பழனிசாமியின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகி உள்ளது.
  • முழு பாதுகாப்பு கொடுத்து இருந்தால் இது போன்ற சம்பவம் நிகழ்ந்து இருக்காது.

ஈரோடு:

ஈரோட்டில் இன்று முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமியின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகி உள்ளது. அவருக்கு முழு பாதுகாப்பு கொடுத்து இருந்தால் இது போன்ற சம்பவம் நிகழ்ந்து இருக்காது.

பாதுகாப்பு அளிப்பதை விட்டுவிட்டு அவர்கள் மீது பொய் வழக்கு போட்டு இருப்பது கண்டனத்திற்குரியது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News