தமிழ்நாடு செய்திகள்

பெட்ரோல் பங்க் தொடங்க தடையில்லா சான்று: தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை- மதுரை ஐகோர்ட் நடவடிக்கை

Published On 2023-03-29 14:09 IST   |   Update On 2023-03-29 14:09:00 IST
  • வீரிருப்பு பகுதியில் விதிமுறைகளை பின்பற்றாமல் பெட்ரோல் பங்க் நடத்த அனுமதி கேட்ட விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது
  • இடவசதிகள், பாதுகாப்பு காரணங்கள் உள்ளிட்ட விதிமுறைகளை பின்பற்றி பெட்ரோல் பங்க்குகள் அமைக்கப்பட வேண்டும்.

மதுரை:

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலு காவை சேர்ந்தவர் சக்கர வர்த்தி. இவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், சங்கரன் கோவில் தாலுகா வீரிருப்பு கிராமத்தில் பெட்ரோல் பங்க் நடத்து வதற்கு அனுமதி வழங்கப்பட்டது. பின்னர் நெடுஞ்சாலைத் துறையினர் சார்பில் தடையில்லா சான்று கேட்டு விண்ணப்பித்தேன். அதை நிராகரித்தனர். எனக்கு தடையில்லா சான்று வழங்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு தனி நீதிபதி, மனுதாரரின் விண்ணப்பத்தை நிராகரித்ததற்காக வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவிக்கும் காரணங்கள் ஏற்புடையதல்ல. அதிகாரிகள் நிராகரித்த நடவடிக்கை ரத்து செய்யப்படுகிறது. உடனடியாக மனுதாரருக்கு தடையில்லா சான்று வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, பெட்ரோலிய துறையானது மத்திய அரசின் வசம் உள்ளது. ஆனால் இடவசதிகள், பாதுகாப்பு காரணங்கள் உள்ளிட்ட விதிமுறைகளை பின்பற்றி பெட்ரோல் பங்க்குகள் அமைக்கப்பட வேண்டும் என்பதற்காக தடையில்லா சான்றை மாநில அரசின் வருவாய்த் துறை மற்றும் தீயணைப்புத் துறை, நெடுஞ்சாலைத்துறையினரிடம் பெற வேண்டும் என்ற வழிகாட்டுதல்கள் உள்ளன.

அந்த வகையில் வீரிருப்பு பகுதியில் விதிமுறைகளை பின்பற்றாமல் பெட்ரோல் பங்க் நடத்த அனுமதி கேட்ட விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. அதை கருத்தில் கொள்ளாமல் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று வாதாடினார்.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த விவகாரத்தில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தர வுக்கு இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டனர். மேலும் விசாரணையை ஒத்தி வைத்தனர்.

Tags:    

Similar News