தமிழ்நாடு

மதுரை துணை மேயர் வீடு, அலுவலகத்தில் தாக்குதல் - இருவர் கைது

Published On 2024-01-09 14:56 GMT   |   Update On 2024-01-09 14:56 GMT
  • துணை மேயர் வீடு, அலுவலகங்களில் மர்ம நபர்கள் தாக்குதல்.
  • தாக்குதலில் இருசக்கர வாகனம், அலுவலக கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன.

மதுரை மாநகராட்சி துணை மேயர் நாகராஜன் வீடு, அலுவலகங்களில் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த துணை மேயர் நாகராஜன், மனைவி செல்வராணி ஆகியோர் வீட்டில் இருந்தபோது, மர்ம நபர்கள் இருவர் தாக்குதல் நடத்தினர்.

தாக்குதலில் இருசக்கர வாகனம், அலுவலக கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பாக துணை மேயர் வீட்டு வாசலில் ரகளையில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

Tags:    

Similar News