தமிழ்நாடு

குடியாத்தம் சந்தைப்பேட்டையில் வருமான வரித்துறை சோதனை நடந்த ஜவுரிலால் ஜெயின் வீடு

வேலூர், குடியாத்தத்தில் அம்பாலால் நிறுவன அலுவலகம், வீடுகளில் வருமான வரி சோதனை

Published On 2023-02-14 05:59 GMT   |   Update On 2023-02-14 05:59 GMT
  • வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடந்தபோது உள்ளே யாரும் அனுமதிக்கப்படவில்லை.
  • உரிமையாளர் குடியாத்தம் சந்தைப்பேட்டையில் வசித்து வருகிறார்.

வேலூர்:

வேலூரை தலைமையிடமாகக் கொண்டு அம்பாலாலில் கட்டுமான நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் தலைமை அலுவலகம் வேலூர் பழைய பைபாஸ் சாலையில் அமைந்துள்ளது. குடியாத்தத்தை சேர்ந்த ஜவுரிலால் ஜெயின் இதனை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் 30-க்கும் மேற்பட்டோர் இன்று காலை அம்பாலால் கட்டுமான நிறுவன அலுவலகத்திற்கு வந்தனர். உள்ளே சென்றதும் கதவுகளை அடைத்து விட்டு சோதனை நடத்தினர். அங்கிருந்த முக்கிய ஆவணங்களை ஆய்வு செய்தனர்.

வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடந்தபோது உள்ளே யாரும் அனுமதிக்கப்படவில்லை. அலுவலகத்தின் வாசலில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதன் உரிமையாளர் குடியாத்தம் சந்தைப்பேட்டையில் வசித்து வருகிறார். அங்குள்ள அவரது வீட்டிலும் இன்று காலை வருமானத்துறை அதிகாரிகள் 10 பேர் அதிரடியாக நுழைந்தனர். அங்கிருந்த முக்கிய ஆவணங்களை அவர்கள் கைப்பற்றினார்

இது தொடர்பாக ஜவுரிலால் ஜெயின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தால் வேலூர், குடியாத்தத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News