தமிழ்நாடு

ஜூலை 4-ந்தேதி முதலீட்டாளர்கள் மாநாடு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது

Published On 2022-06-25 05:32 GMT   |   Update On 2022-06-25 06:57 GMT
  • தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற ஒரு ஆண்டில் மட்டும் 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கக் கூடிய வகைகளில் 131 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டது.
  • மேலும் முதலீட்டாளர்களை ஈர்க்க அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு முதலீட்டாளர்களை சந்திப்பதற்கும் முதல்-அமைச்சர் திட்டமிட்டுள்ளார்.

சென்னை:

சென்னை நுங்கம்பாக்கத்தில் ஜூலை 4-ந்தேதி முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறுகிறது. இதில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது.

தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு முதலீட்டாளர்களை ஈர்க்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

3 மாதங்களுக்கு ஒரு முறையாவது முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்த வேண்டும் என்ற முனைப்பில், கடந்த 2021-ம் ஆண்டு முதல் இந்த முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்று வருகிறது.

கடந்த ஆண்டு ஜூலை மற்றும் செப்டம்பர் மாதங்களில் சென்னையிலும், நவம்பர் மாதம் கோவையிலும் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது.

இதேபோல் இந்த ஆண்டு மார்ச் மாதம் தூத்துக்குடியில் நடைபெற்ற சர்வதேச அணிகலன்களுக்கான பூங்கா அடிக்கல் நாட்டு விழாவிலும் பல்வேறு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போடப்பட்டது. அது மட்டுமின்றி துபாய், அபுதாபி போன்ற நாடுகளிலும் பல்வேறு முதலீட்டாளர்களை சந்தித்து புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டது.

தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற ஒரு ஆண்டில் மட்டும் 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கக் கூடிய வகைகளில் 131 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டது.

மேலும் முதலீட்டாளர்களை ஈர்க்க அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு முதலீட்டாளர்களை சந்திப்பதற்கும் முதல்-அமைச்சர் திட்டமிட்டுள்ளார்.

இந்த நிலையில் அடுத்த கட்ட முதலீட்டாளர்கள் மாநாடு அடுத்த மாதம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டில் பல்வேறு துறை சார்ந்த நிறுவனங்களுடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ள உள்ளது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறக்கூடிய இந்த மாநாட்டில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழக அரசின் வழிகாட்டி நிறுவனம் உள்ளிட்ட அரசு சார்ந்த நிறுவனங்கள் பங்கேற்கின்றன.

இந்த மாநாட்டில் எத்தனை நிறுவனங்களுடன் புரிந்துணவு ஒப்பந்தங்கள் மேற்கொள்வது, எவ்வளவு பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்க கூடிய வகையில் ஒப்பந்தங்கள் போடப்படும் என்பது குறித்து அதிகாரிகள் விரிவாக ஆலோசித்து வருகின்றனர்.

Tags:    

Similar News