தமிழ்நாடு செய்திகள்

தமிழகம் முழுவதும் பறக்கும் படை சோதனையில் சிக்கிய பணம்-பரிசு பொருட்கள்

Published On 2024-04-07 15:45 IST   |   Update On 2024-04-07 15:45:00 IST
  • வாகனங்களில் எடுத்துச் செல்லப்படும் பணத்தை கட்டுகட்டாக பறிமுதல் செய்து வருகிறார்கள்.
  • 10 நாட்களுக்குள் மேல் நீடிக்கும் என்பதால் பல கோடி ரூபாய் சிக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

சென்னை:

பாராளுமன்ற தேர்தலையொட்டி பணப்பட்டு வாடாவை தடுக்க பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் 3 ஷிப்டுகளாக பிரிந்து போலீசார் சோதனை நடத்தி கார்கள் மற்றும் வாகனங்களில் எடுத்துச் செல்லப்படும் பணத்தை கட்டுகட்டாக பறிமுதல் செய்து வருகிறார்கள்.

ரூ.2 கோடி அளவுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் பிடிபட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ரூ. 82½ கோடி பணம் சிக்கயுள்ளது. ரூ.4 கோடி அளவுக்கு மது பாட்டில்கள் பிடிப்பட்டு உள்ளன. ரூ.89 கோடிக்கு பரிசு பொருட்கள் சிக்கி உள்ளன.

பறக்கும் படை அதிகாரிகள் தொடர்ச்சியாக நடத்தும் சோதனை இன்னும் 10 நாட்களுக்குள் மேல் நீடிக்கும் என்பதால் பல கோடி ரூபாய் சிக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News