தமிழ்நாடு

தண்டவாளத்தில் அறுந்து விழுந்த உயரழுத்த மின்கம்பி- துரிதமாக செயல்பட்டு ரெயிலை நிறுத்திய டிரைவர்

Published On 2022-12-24 12:36 GMT   |   Update On 2022-12-24 12:36 GMT
  • டிரைவர் துரிதமாக செயல்பட்டு ரெயிலை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
  • சென்னை- திருவனந்தபுரம், சென்னை- பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

திருவள்ளூர்:

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு பகுதியில் இன்று மாலை தண்டவாளத்தில் உயரழுத்த மின் கம்பி அறுந்து விழுந்தது. அப்போது அந்த வழியாக கோவை நோக்கி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் வந்துகொண்டிருந்தது. தண்டவாளத்தில் மின்கம்பி விழுந்ததை கவனித்த டிரைவர், துரிதமாக செயல்பட்டு ரெயிலை நிறுத்தினார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

மின் கம்பி அறுந்து விழுந்த தகவல் ரெயில்வே அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. அந்த வழித்தடத்தில் செல்லக்கூடிய மின்சார ரெயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டன. சென்னை- திருவனந்தபுரம், சென்னை- பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. மின்கம்பியை சரிசெய்யும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News