தமிழ்நாடு

கனமழையால் பாதிப்பு குடிநீர்-கழிவுநீர் தொடர்பாக 24 மணிநேரமும் புகார் தெரிவிக்கலாம்

Published On 2023-11-30 10:38 GMT   |   Update On 2023-11-30 10:38 GMT
  • வடகிழக்குப் பருவமழையின் போது நாள் ஒன்றுக்கு 600 இடங்களில் குடிநீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு உரிய ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகிறது.
  • சமூக ஊடகங்களில் பெறப்படும் புகார்களும் உடனடியாக சரி செய்யப்பட்டு வருகிறது.

சென்னை:

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நாள் ஒன்றுக்கு 1000 எம்.எல்.டிக்கு மேலாக பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

தினசரி 300 இடங்களில் குடிநீர் மாதிரிகள் சேகரிக் கப்பட்டு குடிநீரின் தரம் ஆய்வகம் மூலம் பரிசோதிக்கப்பட்டு வரும் நிலையில் வடகிழக்குப் பருவமழையின் போது நாள் ஒன்றுக்கு 600 இடங்களில் குடிநீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு உரிய ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகிறது.

குடிநீர் வினியோக நிலையங்களில் குடிநீரில் தேவையான அளவு பிளீச்சிங் பவுடர், படிகாரம், சுண்ணாம்பு போன்ற பொருட்கள் சேர்த்து வழங்கப்படுகிறது.

குடிநீர் வினியோக நிலையங்களில் பெரிய நீர் உறிஞ்சும் எந்திரங்கள் மற்றும் சிறிய நீர் உறிஞ்சும் மற்றும் ஜெனரேட்டர்களைக் கொண்டு தேங்கும் மழைநீர் இறைக்கப்படுகிறது.

குடிநீர் வினியோக நிலையங்களிலும் கழிவுநீரிறைக்கும் நிலையங்களிலும் மணல் மூட்டைகள் பாதுகாப்பு காரணங்களுக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் பொது மக்கள் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்றல் தொடர்பாக புகார்கள் தெரிவிப்பதற்கு ஏதுவாக 24 மணி நேரமும் இயங்கக்கூடிய கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு அறை குடிநீர் வாரியத்தின் தலைமை அலுவலகத்தில் செயல்பட்டு வருகிறது.

இம்மையத்தை தொடர்பு கொள்வதற்கு பொதுமக்கள் 044-45674567 (20 இணைப்புகள்) மற்றும் கட்டணமில்லா தொலைபேசி எண் 1916-ல் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் புகார்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட பகுதி அலுவலகங்களுக்கு தெரிவிக்கப்பட்டு குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு வருகிறது. மேலும் சமூக ஊடகங்களில் பெறப்படும் புகார்களும் உடனடியாக சரி செய்யப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News