தமிழ்நாடு

கைதான கஞ்சா வியாபாரி


வீடு புகுந்து தாய், மகள் பலாத்காரம்- வீடியோ எடுத்து மிரட்டிய கஞ்சா வியாபாரி மனைவியுடன் கைது

Published On 2022-12-05 08:17 GMT   |   Update On 2022-12-05 08:17 GMT
  • கடந்த சில மாதங்களுக்கு முன்பு கஞ்சா விற்பனை செய்த வழக்கு தொடர்பாக பகுடு பாஸ்கரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து, வேலூர் சிறையில் அடைத்தனர்.
  • தாய், மகள் இருவரிடமும் நடந்த சம்பவத்தை வெளியே சொன்னால் வீடியோ மற்றும் புகைப்படத்தை வெளியிட்டு விடுவதாக விடுவதாக மிரட்டி உள்ளார்.

ஆற்காடு:

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு மாசாப்பேட்டை அண்ணா நகர் முதல் தெருவை சேர்ந்தவர் பாஸ்கர் என்கின்ற பகுடு பாஸ்கரன் (33).

இவரது முதல் மனைவி இறந்துவிட்ட நிலையில், தற்போது 2-வது மனைவிதுர்கா(30) என்பவருடன் வசிக்கிறார்.

அதே பகுதியை சேர்ந்தவர் 40 வயது பெண். இவர் தனது மகன் மற்றும் மகளுடன் வசிக்கின்றார். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த அந்த பெண் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து ஆற்காட்டில் குடியேறினார்.

அந்த பெண் ராணிப்பேட்டையில் உள்ள தனியார் ஷூ கம்பெனியில் வேலை செய்து வருகிறார். அவரது மகள் ஆற்காட்டில் உள்ள பள்ளியில் பிளஸ் 2 படிக்கிறார்.

இந்நிலையில், அந்த பெண்ணிடம் பாஸ்கரன். அவ்வப்போது வலியச் சென்று பேச்சு கொடுப்பாராம். ஆனால் அந்த பெண் அவரை கண்டுகொள்ளாமல் விரட்டி வந்ததாக கூறப்படுகிறது.

அந்தப் பெண்ணை எப்படியாவது அடைய வேண்டுமென பாஸ்கரன் காத்திருந்துள்ளார். மேலும் பாஸ்கரின் 2வது மனைவி துர்காவிற்கும் அந்த பெண்ணிற்கும் அவ்வப்போது தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கஞ்சா விற்பனை செய்த வழக்கு தொடர்பாக பகுடு பாஸ்கரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து, வேலூர் சிறையில் அடைத்தனர். அவர் கடந்த 27ம் தேதி சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். அவரிடம் தன்னிடம் அந்த பெண் அடிக்கடி தகராறு செய்து திட்டியதாக துர்கா கூறியுள்ளார்.

இதனையடுத்து, அந்த பெண்ணை பழி வாங்க திட்டம் தீட்டிய பாஸ்கரன் கடந்த 28ம் தேதி இரவு 11 மணிக்கு தனது மனைவியுடன், அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று கதவை தட்டி உள்ளார். அப்போது கதவை திறந்தவுடன் அந்த பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி பாஸ்கரன் நுழைந்துள்ளார்.

துர்கா வெளிப்புறமாக கதவை பூட்டிக்கொண்டு வெளியே காவலுக்கு நின்று உள்ளார். பின்னர், பாஸ்கர் கத்தியை காட்டி மிரட்டி அந்தப் பெண்ணை கட்டி போட்டுள்ளார். மேலும் சத்தம் கேட்டு ஓடி வந்த மாணவியின் உடைகளை கழற்ற சொல்லி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

பின்னர் மாணவியை நிர்வாணமாக நிற்க வைத்து தனது செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துள்ளார்.

அதனை தொடர்ந்து மாணவியை அங்குள்ள கழிவறையில் தள்ளி கதவை பூட்டி உள்ளார். அதன் பின்னர் அந்த பெண்ணையும் கத்தியை காட்டி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

மேலும், அவரையும் நிர்வாணமாக வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்துள்ளார். மறுநாள் அதிகாலை 3 மணி வரை இருவரையும் தொடர்ச்சியாக பாலியல் பலாத்காரம் செய்த பகுடு பாஸ்கரன் அனைத்தையும் செல்போனில் வீடியோ மற்றும் போட்டோக்களாக பதிவு செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

தாய், மகள் இருவரிடமும் நடந்த சம்பவத்தை வெளியே சொன்னால் வீடியோ மற்றும் புகைப்படத்தை வெளியிட்டு விடுவதாகவும், எங்ருந்தாலும் தேடி வந்து கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளார்.

மேலும், தொடர்ந்து பல முறை வீடியோவை காட்டி அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். தன்னையும் தனது குடும்பத்தையும் கொலை செய்து விடுவார்கள் என்று அச்சத்தில் இதுகுறித்து யாரிடமும் கூறாமல் அந்தப் பெண் இருந்துள்ளார்.

தொடர்ந்து, பகுடு பாஸ்கரின் தொல்லை அதிகமானதால் மன வேதனை அடைந்த அந்த பெண் இதுகுறித்து ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் காலை புகார் செய்தார்.

இதுகுறித்து, இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி மற்றும் போலீசார் போக்சோ சட்டம் உள்ளிட்ட 9 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தாய், மகளை பாலியல் பலாத்காரம் செய்த பகடு பாஸ்கரன் மற்றும் உடந்தையாக இருந்த அவரது மனைவி துர்கா ஆகியோரை தேடி வந்தனர்.

இந்நிலையில், ஆற்காடு-கண்ணமங்கலம் கூட்ரோடு உழவர் சந்தை அருகில் பதுங்கி இருந்த தம்பதிகள் இருவரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News