தமிழ்நாடு

தேசிய நெஞ்சாலை ஓரம் நடைபாதை, தடுப்பு வேலி அமைத்ததில் ரூ.1 கோடி மோசடி- 3 பேர் மீது வழக்குப்பதிவு

Published On 2023-09-03 01:32 GMT   |   Update On 2023-09-03 01:32 GMT
  • மங்காளூர்- விழுப்புரம் தேசிய நெஞ்சாலை ஓரம் நடைபாதை, தடுப்பு வேலி அமைத்ததில் மோசடி.
  • ஓய்வுபெற்ற கோட்ட பொறியாளர் பழனிசாமி உள்பட 3 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு.

2019ம் ஆண்டில் அதிமுக ஆட்சியின்போது, மங்காளூர்- விழுப்புரம் தேசிய நெஞ்சாலை ஓரம் நடைபாதை, தடுப்பு வேலி அமைத்ததில் ரூ.1.11 கோடி மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுதொடர்பாக ஓய்வுபெற்ற கோட்ட பொறியாளர் பழனிசாமி உள்பட 3 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும், நடைபாதையில் 2.1 மீட்டருக்கு பதிலாக 0.90 மீட்டர் மட்டுமே டைல்ஸ் கற்களை பதித்து மோசடி செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், இதுதொடர்பாக பணியில் உள்ள 2 அதிகாரிகள் மீதும் துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News