தமிழ்நாடு

கலாஷேத்ரா கல்லூரி முன்னாள் மாணவி அளித்த பாலியல் புகாரில் முன்னாள் பேராசிரியர் ஸ்ரீஜித் கைது

Published On 2024-04-23 13:32 GMT   |   Update On 2024-04-23 14:37 GMT
  • 15 ஆண்டுகளுக்கு முன்பு தன்னை ஸ்ரீஜித் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக தற்போது வெளிநாட்டில் வசிக்கும் பெண் புகார் அளித்திருந்தார்.
  • அப்பெண்ணிடம் அடையாறு மகளிர் போலீசார், வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணை மேற்கொண்டனர்

சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா அறக்கட்டளை வளாகத்தில் உள்ள கல்லூரியில் படித்த முன்னாள் மாணவி அளித்த புகாரில், முன்னாள் பேராசிரியர் ஷீஜித் கிருஷ்ணா போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

15 ஆண்டுகளுக்கு முன்பு தன்னை ஷீஜித் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக தற்போது வெளிநாட்டில் வசிக்கும் அப்பெண் புகார் அளித்திருந்தார்.

அப்பெண்ணிடம் அடையாறு மகளிர் போலீசார், வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணை மேற்கொண்ட நிலையில், பிப்ரவரி 2024-ல் நீலாங்கரை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் ஷீஜித் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், நேற்று ஷீஜித்தை காவல்துறையினர் கைது செய்தனர். இதனையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டார் என்று காவல்துறை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது ஷீஜித் கலாஷேத்ராவில் பணியாற்றவில்லை. தனியாக நடனப்பள்ளி அமைத்து மாணவிகளுக்கு நடனம் கற்றுக்கொடுத்து வருகிறார்.

கடந்தாண்டு இதே கல்லூரியில் பணியாற்றிய நடனத்துறை உதவி பேராசிரியர் ஹரி பத்மன் மீது மாணவிகள் கொடுத்த பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News